கார சட்னி |
|
தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - ஒன்று
- மிளகாய் வற்றல் - 2
- கல் உப்பு - முக்கால் தேக்கரண்டி
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
- கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
|
முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
|
 |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகை போட்டு வெடிக்க விடவும். பிறகு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
|
 |
பிறகு உளுத்தம் பருப்பு சற்று லேசாக சிவந்ததும் பெருங்காயத் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 30 நொடி பொன்னிறமாக வதக்கவும்.
|
 |
கடலைப் பருப்பு பொன்னிறம் ஆனதும் வெங்காயம், மிளகாய் வற்றல், புளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் வற்றல் சிவக்க வேண்டும்.
|
 |
அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
|
 |
ஆறியதும் மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்தில் நைசாக அரைக்கவும்.
|
 |
மிக எளிதில் செய்ய கூடிய கார சட்னி தயார். இதை இட்லி, ரவா தோசை மற்றும் வெள்ளை அப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது எடுத்துச் செல்லலாம். சீக்கிரத்தில் கெடாமல் இருக்கும்.
|
 |
இந்தக் குறிப்பினை வழங்கி, நமக்கு செய்து காட்டியவர் திருமதி. சாந்தி விஸ்வநாதன் அவர்கள். இவர் செட்டிநாடு உணவுகள் தயாரிப்பில் நல்ல அனுபவம் உள்ளவர்.
|
 |
|
|
|
|
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
24 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -