உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

கார சட்னி



தேவையானப் பொருட்கள்

  • தக்காளி - 2
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • மிளகாய் வற்றல் - 2
  • கல் உப்பு - முக்கால் தேக்கரண்டி
  • புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
step 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகை போட்டு வெடிக்க விடவும். பிறகு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
step 2
பிறகு உளுத்தம் பருப்பு சற்று லேசாக சிவந்ததும் பெருங்காயத் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 30 நொடி பொன்னிறமாக வதக்கவும்.
step 3
கடலைப் பருப்பு பொன்னிறம் ஆனதும் வெங்காயம், மிளகாய் வற்றல், புளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் வற்றல் சிவக்க வேண்டும்.
step 4
அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
step 5
ஆறியதும் மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்தில் நைசாக அரைக்கவும்.
step 6
மிக எளிதில் செய்ய கூடிய கார சட்னி தயார். இதை இட்லி, ரவா தோசை மற்றும் வெள்ளை அப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது எடுத்துச் செல்லலாம். சீக்கிரத்தில் கெடாமல் இருக்கும்.
step 7
இந்தக் குறிப்பினை வழங்கி, நமக்கு செய்து காட்டியவர் திருமதி. சாந்தி விஸ்வநாதன் அவர்கள். இவர் செட்டிநாடு உணவுகள் தயாரிப்பில் நல்ல அனுபவம் உள்ளவர்.
step 8


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
karachatni
ஜூலை 2, 2007 - 3:33pm - வழங்கியவர் simuke

ஹலோ சாந்தி மேடம் என் பெயர் முத்து மாரி நீங்கள் செய்து காட்டிய காரசட்னி ரெசிபி யில் கொத்துமல்லி இலை அல்லது புதினா இலை சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்குமா?

டேஸ்டி சட்னி
அக்டோபர் 10, 2007 - 7:48pm - வழங்கியவர் vinnie

இந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது. செய்து காண்பித்த திருமதி.சாந்தி அவர்களுக்கு மிகவும் நன்றி.

சாந்தி விஸ்வநாதன்
மே 17, 2008 - 11:55am - வழங்கியவர் MarliyaNoohu

திரு சாந்தி விஸ்வநாதன் உங்கள் குறிப்பை முயர்சித்தேன் கால் கிலோ தக்காளியில் பண்ணினேன் ரொம்ப அருமை தேங்ஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு