தேவையானப் பொருட்கள்
- கோதுமை - 250 கிராம்,
- சர்க்கரை - 300 கிராம்,
- ஜவ்வரிசி - 50 கிராம்(நைசாக பொடிக்கவும்),
- பால் - ஒன்றரை கப்,
- நெய் - 100கிராம்,
- முந்திரி - 25 கிராம்,
- ஏலக்காய் - 8,
|
செய்முறை
- கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும்.
- நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு,மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே 3 மணி நேரம் வைக்கவும்.
- மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒருகப் பாலில் ஜவ்வரிசி மாவை கரைத்து சேர்க்கவும்.
- பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும்.
- சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.
- கைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும்.
- முந்திரியை ஒடித்து, மீதி நெய்யில் வறுத்து கலவையுடன் சேர்த்து கிளறவும்.
- ஏலக்காயை தோல் நீக்கி, பொடியாக்கி அதனுடன் சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போடவும்(நன்கு திரண்டு, நெய் கக்குவது போல் வரும்)
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
30 துண்டு அல்வா கிடைக்கும். |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
18 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -