செய்முறை
- தேங்காயில் கெட்டிப்பால் தனியாக எடுத்துக் கொண்டு, தண்ணீர்ப்பால் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.
- சோம்பு, மஞ்சள், காய்ந்தமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்குகளை அவித்து தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் பாலில் அரைத்த மசாலாவைக் கரைத்து சிறிது உப்பும் போட்டு பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஓர் அலுமினியச் சட்டியை அடுப்பில் வைத்து, சட்டி சூடானதும் நெய்யைப் ஊற்றி சூடானதும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- அத்துடன் இஞ்சி பூண்டையும் போட்டு வதக்கி, பிறகு கறிவேப்பிலை, உருளைக்கிழங்குத் துண்டுகள், நறுக்கின தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி கரைத்து வைத்திருக்கும் மசாலாவை சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்.
- ஒரு கொதி நன்கு கொதித்ததும் இடியப்பங்களை துண்டு துண்டுகளாகப் பிய்த்து அதில் போட்டுக் கிளறவும்.
- கம்பி கம்பியாகப் பிரிந்ததும், கெட்டிப் பாலில் முட்டை ஊற்றிக் கலக்கி இடியப்பத்தில் தெளித்து தண்ணீர் சற்று வற்றியதும் இறக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -