உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஊந்தியா

 

இது குஜராத்தில் சங்கராந்திக்கு செய்யும் கூட்டு

தேவையானப் பொருட்கள்

  • அவரைக்காய் - 1/4 கிலோ
  • உருளைக்கிழங்கு (பெரியது)- 1
  • சேனைக்கிழங்கு - 1 துண்டு
  • கத்தரிக்காய் - 1
  • வாழைக்காய் - 1
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • வெந்தயக்கீரை - ஆய்ந்து நறுக்கியது - 1 கப்
  • கோதுமை மாவு - 1 கப்
  • கடலை மாவு - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி துருவல் - 2 டீஸ்பூன்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லித் தழை

செய்முறை

  • 1. ஒரு பாத்திரத்தில் வெந்தயக் கீரை, கோதுமை மாவு,கடலை மாவு, 2 பச்சை மிளகாய் (நறுக்கியது), இஞ்சித் துருவல் 1 டீஸ்பூன், சர்க்கரை, எலுமிச்சை சாறு, கரம் மசாலா தூள், உப்பு, எண்ணெய் சிறிது சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி குக்கரில் வேக வைத்து ஆற வைத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • 2. தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய் 2, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • 3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு நறுக்கிய (சற்று பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்) காய்களைப் போட்டு ஓமம், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • 4. வெந்ததும் அரைத்த மசாலா, வேக வைத்த துண்டுகள் போட்டுக் கிளறி சேர்ந்து வந்ததும் இறக்கி பச்சைக் கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

வழங்கியவர்

T S JAYANTHI CHENNAI 600 048

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர்கள் 30 நிமிடங்கள் 15 நிமிடங்கள்
  random food image


comments