| |
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி |
|
|
இந்த பிரியாணி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். ஒரு தடவை இந்த பிரியாணியை வீட்டில் செய்தீர்களென்றால் பிறகு ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும்போது இந்த முறையில்தான் செய்யவேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள்.
|
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி - 3 கப்,
- மட்டன் - 1/2 கி,
- இஞ்சி - 50 கிராம்,
- பூண்டு - 25 பல்,
- பெரிய வெங்காயம் - 4,
- சின்ன வெங்காயம் - 15,
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 4,
- கிராம்பு - 4,
- பட்டை - 4 துண்டு,
- ஜாதிக்காய் - பாதி,
- ஏலக்காய் - 4,
- மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
- கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
- தேங்காய் - 1 மூடி,
- முந்திரி - 10,
- தயிர் - 1/2 கப்,
- எலுமிச்சம்பழம் - 1 மூடி,
- புதினா - 1 கட்டு,
- மல்லி - 1 கட்டு,
- நெய் - 1/2 கப்,
- எண்ணெய் - 1/2 கப்.
- --------------------------
- தாளிக்கத்தேவையானவை
- --------------------
- கிராம்பு - 3,
- பட்டை - 3 சிறிய துண்டு,
- ஏலக்காய் - 3,
- பிரிஞ்சி இலை - 1,
- சோம்பு - 1 டீஸ்பூன்.
|
செய்முறை
- மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
- பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
- பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
- பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
- துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
- காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
- 5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
- தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
- சேர்க்கவும்.
- இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
- உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
- பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
- பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
- .
|
வழங்கியவர்
.மாலதிமோகன்
 |
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 56 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -