உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

வாழைப்பூ கோலா உருண்டை



தேவையானப் பொருட்கள்

  • வாழைப்பூ - 1
  • தேங்காய் - 1 மூடி
  • பொட்டுக்கடலை - 2 கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 6
  • பூண்டு - 4 பல்
  • இஞ்சி - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
step 1
வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். வாழைப்பூவை நரம்பு, கண்ணாடி நீக்கி, பொடியாக நறுக்கி, மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
step 2
வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சோம்பையும், காய்ந்த மிளகாயையும் போடவும். சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
step 3
வெங்காயம் வதங்கியதும், வாழைப்பூவை தண்ணீரை பிழிந்து விட்டு, அதில் சேர்த்து வதக்கவும்.
step 4
வாழைப்பூ நன்கு வதங்கியதும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
step 5
வதங்கிய பின் இறக்கி ஆற விடவும்.
step 6
நன்கு ஆறிய பின், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து கெட்டியாக, நைசாக மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரைக்கவும்.
step 7
அரைத்த விழுதை கையில் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு எழுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
step 8
வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன், உருட்டி வைத்த உருண்டைகளை ஐந்து அல்லது ஆறாக போடவும்.
step 9
நன்கு சிவக்க விட்டு பொரித்து எடுக்கவும்.
step 10
சூடான, சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயார்.
step 11
அறுசுவையில் 300 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
step 12


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
Doubt madam
பிப்ரவரி 26, 2008 - 7:48pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Intha urundaiyil kulambu seivathu eppadi?
Sollunga selvi Madam.

Selvi, nan sengu pathen
மார்ச் 7, 2008 - 11:45pm - வழங்கியவர் mals

Selvi, nan sengu pathen ithai. ellam porinju poyduchu. spoon vetchu sapidara mathiri ayduchu. enna thappu paninen nan. pottukadalai nriya podanuma?

veetla iruntha rahi mavu pisangu vadaiya tati poten, athuvum porinju pohuthu, thool thoola.

olunga vera enna pannaum

வாழைப்பூ கோலா...
மார்ச் 9, 2008 - 5:44am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு மால்ஸ்,(உங்க முழுப் பேர் தெரியலையே)
நீங்க கெட்டியாக அரைக்கலைன்னு நினைக்கிறேன். சில சமயம் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்தால் நைசாக மசியாமல் இருக்கும். அப்ப பொட்டுக்கடலையை தனியாக பொடித்து வைத்துக் கொண்டு அரைத்த விழுதுடன் சேர்க்கலாம். எப்படி இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க கூடாது. நைசாக இல்லையென்றாலும், கெட்டியா இல்லைன்னாலும் பிரிந்து ஓடும். முயற்சியுங்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

வாழைப்பூ குழம்பு...
மார்ச் 9, 2008 - 6:02am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் போர்ஷியா,
நலமா, சாரிப்பா, ரெண்டு நாளா பிசி சரியில்லை. அதான் யாருக்கும் பதில் கொடுக்க முடியலை.
இந்த உருண்டை போட்டு குழம்பு வைக்கணும்னா, உருண்டை செய்து வெச்சுகிட்டு குழம்பு வெச்சு போடணும்.
எண்ணெயில் சோம்பு தாளித்து, 2வெங்காயம், 2தக்காளி நறுக்கி வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, கோலா போடலாம். தேவைப்பட்டா, தேங்காய் கொஞ்சம் அரைச்சு விடலாம்.
அன்புடன்,
செல்வி.

Nandri Selvi amma
மார்ச் 9, 2008 - 7:48pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar,
Thanks,i was worrying why no response? good i'll try and let you know.