இறால் சொதி

வழங்கியவர் : malathi
தேதி : வியாழன், 03/01/2008 - 15:18
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- நடுத்தரமான இறால் - 10
- தேங்காய் - ஒரு மூடி
- சோம்பு - 2 தேக்கரண்டி
- மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
- மிளகு - 5
- சீரகம் - கால் தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 8
- பச்சை மிளகாய் - 2
- புளி - ஒரு நெல்லிகாய் அளவு
- கிராம்பு - 2
- பட்டை - ஒரு துண்டு
- எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
- மாங்காய் - ஒரு சிறிய துண்டு (மாங்காய் கிடைக்காவிட்டால் பரவாயில்லை)
- தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளர் எடுக்கவும். இரண்டாவது பால் 3 டம்ளர் எடுக்கவும்.
- மிளகு, சீரகம், சோம்பு, மல்லித்தூள் இவற்றை சேர்த்து அரைத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது பாலில் இந்த மசாலாவை கரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, அரை தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும்.
- நீளமாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். கரைத்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.
- சொதியில் மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்த இறால், உருண்டையாக உருட்டிய புளி (புளியை கரைக்க கூடாது) நைசாக சீவிய மாங்காய், இவை எல்லாவற்றையும் போடவும். நன்றாக கொதிக்க விடவும்.
- சுமார் 15 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். இப்போது முதல் பாலை சேர்க்கவும். சொதி ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
Note:
இந்த சொதி சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இறால் போடாமலும் இதை செய்யலாம். சொதி செய்து வத்தல் பொரித்து தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் வேறு சாப்பிட எதுவுமே வேண்டாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
55 நிமிடங்கள் 9 sec முன்பு
58 நிமிடங்கள் 25 sec முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 22 sec முன்பு