இந்த சொதி சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இறால் போடாமலும் இதை செய்யலாம். சொதி செய்து வத்தல் பொரித்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேறு சாப்பிட எதுவுமே வேண்டாம்.
|
தேவையானப் பொருட்கள்
- நடுத்தரமான இறால் - 10,
- தேங்காய் - 1மூடி,
- சோம்பு - 2 டீஸ்பூன்,
- மல்லிதூள் - 1 டீஸ்பூன்,
- மிளகு - 5,
- சீரகம் - 1/4 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் - 8,
- பச்சமிளகாய் - 2,
- புளி - ஒரு நெல்லிகாய் அளவு,
- கிராம்பு - 2,
- பட்டை - ஒரு துண்டு,
- எலுமிச்சம்பழம் - 1 மூடி
- மாங்காய் - ஒரு சிறிய துண்டு ( மாங்காய் கிடைக்காவிட்டால் பரவாயில்லை )
|
செய்முறை
- தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும்.
- முதல் பால் 1 டம்ளர் எடுக்கவும்.
- இரண்டாவது பால் 3 டம்ளர் எடுக்கவும்.
- மிளகு, சீரகம், சோம்பு, மல்லிதூள் இவற்றை சேர்த்து அரைத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது பாலில் இந்த மசாலாவை கரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, 1/2 டீஸ்பூன் சோம்பு தாளிக்கவும்.
- நீளமாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- கரைத்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.
- சொதியில் மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்த இறால், உருண்டையாக உருட்டிய புளி ( புளியை கரைக்க கூடாது. ) நைசாக சீவிய மாங்காய், இவை எல்லாவற்றையும் போடவும்.
- நன்றாக கொதிக்கவிடவும்.
- சுமார் 15 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
- இப்போது முதல் பாலை சேர்க்கவும்.
- சொதி ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
|
வழங்கியவர்
மாலதி மோகன்
 |
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -