தேவையானப் பொருட்கள்
- கோழி-1/2கிலோ
- வெங்காயம்-3
- பச்சை மிளகாய்-4
- இஞ்சி பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள்-1மேசைக்கரண்டி
- தனியா தூள்-1 1/2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
- தயிர்-2 மேசைக்கரண்டி
- முந்திரி பருப்பு-15
- கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
- சோம்பு-1மேசைக்கரண்டி
- மிளகு-1/2தேக்கரண்டி
- ஏலக்காய்-2
- கிராம்பு-2
- பட்டை-1"துண்டு
- பிரிஞ்சி இலை-1
- கறிவேப்பிலை-2கொத்து
- மல்லித்தழை-1/2கப்
- எண்ணெய்-3மேசைக்கரண்டி
- உப்பு-தெவையான அளவு
|
செய்முறை
- கோழியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலாதூள்,தயிர்,உப்பு சேர்த்து பிசிறி 2 மணி நேரம் ஊற விடவும்.
- வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.
- முந்திரி பருப்பை அரைக்கவும்.
- பச்சை மிளகாயுடன் மல்லித்தழை,சோம்பு,மிளகு சேர்த்து அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- ஊற வைத்த கோழி துண்டுகளை போட்டு கிளறவும்.
- கோழி முக்கால் பாகம் வேகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும்.
- தேவைப் பட்டால் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து கிளறவும்.
- கோழி பதமாக வெந்ததும அரைத்த முந்திரி பருப்பை ஊற்றி 2நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
காரம் அதிகம் சேர்க்காதவர்கள் பச்சை மிளகாய் அளவை குறைக்கலாம்
வழங்கியவர்
கவிசிவா
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -