தேவையானப் பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 3,
- கேரட் - 1,
- முருங்கைக் காய் - 1,
- பெரிய வெங்காயம் - 3,
- காய்ந்த மிளகாய் - 4,
- தக்காளி - 3,
- எலுமிச்சம் பழம் -1,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- தேங்காய் - 1,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- பூண்டு - 10 பல்,
- உப்பு - தேவையான அளவு,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 15,
- எண்ணெய் - 3 ஸ்பூன்.
செய்முறை
- கேரட், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் தோல் சீவி, முருங்கைக்காயும் சேர்த்து சுமாரான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- தேங்காயைத் துருவி முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைக்கவும்.
- காய்ந்த மிளகாய், சீரகத்தை நைசாக அரைத்து வைக்கவும், பூண்டை தனியாக அரைத்து வைக்கவும்.
- இரண்டாவது பாலில் காய்களையும், வெங்காயத்தையும் வேக வைக்கவும்.
- காய்கள் வெந்ததும், தக்காளியைப் போடவும்.
- மிளகாய், சீரகம் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்ததும், இறக்கி வைத்து முதல் பால், பூண்டு விழுது, எலுமிச்சம் பழ சாறு சேர்க்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
குறிப்பு
சாதம், இடியாப்பத்துக்கு பொருத்தமாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |