தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி -- 1 கப்
- பாசி பருப்பு -- 1/4 கப்
- வெல்லம் -- 1 கப் (துருவியது)
- ஏலக்காய் -- 4 என்னம் (நசுக்கியது)
- பால் -- 1 கப் (காய்ச்சியது)
- நெய் -- 1/2 கப்
- முந்திரி -- 10 என்னம்
- உலர்ந்த திராட்சை -- 10என்னம்
செய்முறை
-
-
-
- அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.
- வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
- அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
- சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.
-
குறிப்பு
இது நம் வீட்டில் சமைப்பது. மண்பானை வைத்து சமைத்தால் முதலில் அரிசி, பாசிபருப்பை கழுவி உலை கொதிக்க வைத்து கொதித்த பின் தான் அரிசி,பாசிபருப்பை போடுவோம்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
12 நிமிடங்கள் |
55 நிமிடங்கள் |