தோலை சமைக்க எடுக்கும் போது, அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைத் தோலஒ சுத்தமாக எடுத்து விட வேண்டும். அப்போதுதான் குழம்பு கசக்காமல் இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- கமலா ஆரஞ்சு தோல் - 2 பழத்தினுடையது,
- மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
- புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு,
- கடுகு - 1/2 டீஸ்பூன்,
- பெருங்காயம் - சிறிது,
- கறிவேப்பிலை - 10,
- வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
- அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
செய்முறை
- ஆரஞ்சு தோலை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக (பாக்கு போல) நறுக்கவும்.
- 1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய தோலை சேர்த்து நன்கு வதக்கவும். தோல் அதிலேயே பாதி வெந்து விடும்.
- பிறுகு கரைத்த புளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- புளி கொதித்து திக்காக வந்ததும் வெல்லத்தை தூளாக்கி போட்டு கலந்து விடவும்.
- அரிசி மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை விட்டு இறக்கவும்.
-
குறிப்பு
சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேறு சாதமே வேணடாம்னு தோணும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்கும் நன்றாக இருக்கும். மசக்கை வாந்தியை கட்டுப் படுத்தும். வாரக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
சமைக்கும் நேரம்
|
|
15 நிமிடங்கள். |