தேவையானப் பொருட்கள்
- மைதா மாவு -- 350 கிராம்
- பேக்கிங் பவுடர் -- 1 1/2 டீஸ்பூன்
- நெய் -- 2 டேபிள்ஸ்பூன்
- தயிர் -- 1 டீஸ்பூன்
- கொத்துக்கறி -- 250 கிராம்
- பெரிய வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி தழை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
- புதினா இலை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
- தக்காளி -- 1 என்னம்
- கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
- எண்ணைய் -- பொரிக்க
|
செய்முறை
- மைதாமாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து உப்பு, நெய், தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கொத்துக்கறியை வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேகவைத்து தோலை நீக்கி கையால் பிசைந்து அதனுடன் கரம்மசாலா, 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை, 1 டீஸ்பூன் புதினா இலை சேர்த்து தனியே வைக்கவும்.
- கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான உப்பு, மீதியுள்ள கொத்தமல்லி தழை, புதினா இலை, தக்காளி கலவை சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 1/2 மணிக்குப் பிறகு பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து அதை அப்படியே பாதியாக மடித்து மேலே தேய்த்து அதை கோன் வடிவமாக செய்து கொத்துக்கறி கலவையை வைத்து மூடி 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- வாணாலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான பஞ்சாபி முறையில் செய்த மட்டன் சமோசா ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -