கிடாரங்காய் ஊறுகாய்

வழங்கியவர் : Jaleela Banu
தேதி : புதன், 09/01/2008 - 14:36
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- கிடாரங்காய் - பத்து (உப்பில் ஊறியது)
- நல்லெண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - ஐந்து
- கறிவேப்பிலை - அரை கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 2 மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
- இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
- தக்காளி - மூன்று (பொடியாக அரிந்தது)
- சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
- புளி - ஒரு கொட்டைபாக்கு அளவு
- வெல்லம் - ஒரு சிறிய துண்டு
- கிடாரங்காயை உப்பில் ஊறியதை பொடியாக நறுக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரிந்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
- மிளகாய்தூள், மஞ்சள் துள், சீரகத்தூள், வெந்தயப் பொடி, ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் வதக்கி புளியை கரைத்து ஊற்றி கிடாரங்காயையும் வதக்கி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
Note:
இது ஒரு தஞ்சாவூர் ஸ்டைல் ஊறுகாய் செய்து பாருங்கள்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
முதல் முறை இப்படி ஒரு காய் கேக்கறேன் ..ஒரு வேளை பேர் எனக்கு புரியலையா இருக்கும்...நெல்லிக்காஇ,கலாக்காய் செம்மீன் புளி போல் இது எப்படி இருக்கும்
தளிகா
தளிகா!...கடாரங்காயைத்தான் ஜலீலா குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆம் ஐ கரைக்ட்?
யெஸ் மாலதி யு ஆர் காரெக்ட்
ஜலீலா
Jaleela