தேவையானப் பொருட்கள்
- மோர் -- 1 லிட்டர்
- பச்சை மிளகாய் -- 1/2 கிலோ
- உப்பு -- தேவையான அளவு
|
செய்முறை
- பச்சைமிளகாயை நன்றாக கழுவி காய வைத்து நடுவில் ஓட்டை போடவும்.
- மோரை நன்றாக கடைந்து உப்பு சேர்க்கவும்.
- ஓட்டை போட்ட பச்சை மிளகாயை மோரில் ஊறபோடவும்.
- அதை அப்படியே நிழலில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும்.
- மறுநாள் மிளகாயை எல்லாம் எடுத்து கம்பியில் கோர்த்து வைக்கவும்.
- மோருடன் சிறிது புது மோர் சேர்த்து உப்பு போடவும்.
- பின் கம்பியில் கோர்த்து பாதிநாள் வைத்திருந்த மிளகாயை மோரில் ஊறப்போடவும்.
- இதை போலவே மோர் தீரும் வரை செய்யவும்.
- புது மோர் ஒரு தடவை சேர்த்தால் போதும்.
- அப்படியே மோர் முழுவதும் மிளகாயில் ஒட்டி வரும் வரை ஊறவைத்து அப்படியே காய வைத்து வத்தல் ஆகும் வரை வைக்கவும்.
- காரமான மோர் மிளகாய் ரெடி.
- இதை இரண்டிரண்டாக எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து மோர் சாதத்திற்கு சாப்பிட சூப்பராக இருக்கும்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -