தேவையானப் பொருட்கள்
- பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 100 கிராம்,
- பாலக்கீரை - 20,
- பெரிய வெங்காயம் - 2,
- பச்சை மிளகாய் - 2,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- இஞ்சி - 1 அங்குல துண்டு,
- பூண்டு - 8 பல்,
- பெருங்காயம் - சிறிது,
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்.
|
செய்முறை
- பச்சைப்பயிறை லேசாக வறுத்து, இரண்டாக உடைத்து தோல் நீக்கி வைக்கவும். (மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் உடைந்து விடும்)
- உடைத்த பயிறை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
- கீரை, வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாயை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கிய பின், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 1/2 நிமிடம் கழித்து வேகவைத்த பயிறு சேர்க்கவும்.
- கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரை, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
24 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -