தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி - 1 1/2 கப்
- துவரம்பருப்பு - 1/2 கப்
- நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்
- வெங்காயம் - 1
- புளி - எலுமிச்சை அளவு
- சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
- நெய் - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
|
செய்முறை
- முதலில் குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு துவரம்பருப்பைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- காய்களை நறுக்கி, புளி கரைத்து, வெங்காயம் வதக்கி -எல்லாம் ரெடி செய்யும் வரை துவரம்பருப்பு வெந்து கொண்டிருக்கட்டும்.
- பிறகு அரிசியைக் களைந்து சேர்க்கவும்.
- எண்ணையில் வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறித்துண்டுகள், கரைத்த புளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பச்சைக் கொத்தமல்லியைத்தூவிக் கிளறி மூடி வைக்கவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
5 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -