தேவையானப் பொருட்கள்
- நெல்லிக்காய்-20
- உப்பு-3மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய்-2
செய்முறை
- 1லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடவும்.
- இந்த தண்ணீரில் உப்பு,பொடியாக வெட்டிய பச்சை மிளகாய்,கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
- 3நாட்கள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
குறிப்பு
நெல்லிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.ஒன்றிரண்டு நாட்களில் தண்ணீரின் மேல் வெள்ளையாக ஒரு ப்டலம் வரும் அதை நீக்கி விட்ட் பயன் படுத்தலாம்.தண்ணீரின் நிறம் அதிகமாக மாறி விட்டால் தண்ணீரை மாற்றி வேற் தண்ணீரும் உப்பும் சேர்க்கலாம்.