தேவையானப் பொருட்கள்
- வெண்டக்காய் - 15
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1.2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை - 10 இலைகள்
- கரம் மசால பொடி - 1/4 ஸ்பூன்
- தேங்காய்ப் பால் - 1/4 கப்
- எண்ணை- 2 ஸ்பூன்
செய்முறை
- உப்பு,மிளகாய்,மஞ்சள்,மல்லித் தூள்களை ஒன்றாய் கலந்து வைக்கவும்..வெண்டக்காயை கீழிருந்து மேலாக கீரி காம்பு பகுதியில் கீராமல் வைக்கவும்..நடுவே கலந்து வைத்த பொடியை தேய்த்து அது போல் 15 வெண்டக்காய்களையும் வைக்கவும்
-
- 1 ஸ்பூன் தேங்காய் என்னையை காயவைத்து அதில் வெண்டக்காயை இட்டு 5 நிமிடம் லேசாக வறுத்து வாரி வேறு பாத்திரத்தில் வைக்கவும்..
-
- பின் மீதமுள்ள என்னையில் வெங்காயம்,தக்காளி வதக்கி தக்காளி உடைந்ததும் மீதம் வெண்டக்காயில் தேய்த்தபொடி இருந்தால் அதனையும் இட்டு வதக்கி கரம் மசாலா பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி கறிவேப்பிலை,வெண்டக்காய்,தேங்காய்ப் பால் சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடியிடாமல் கொதிக்க விட்டால் பால் கொஞ்சம் வற்றி நல்ல மசாலா வெண்டக்காயில் பிடிக்கும்..உப்பு தேவையெனில் சேர்க்கலாம்.
-
-
-
குறிப்பு
இதுவும் தயிர் சாதமும் நல்ல காம்பினேஷன்...வெஜிடேரியன் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது தான்