தேவையானப் பொருட்கள்
- கோழிக் குஞ்சு - 1/2 கிலோ,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 8 பல்,
- தக்காளி - 1,
- மிளகு - 1 மேசைக்கரண்டி,
- சீரகம் - 2 தேக்கரண்டி,
- தனியா - 2 தேக்கரண்டி,
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் - 2,
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - 1 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- கோழியை சுத்தம் செய்து, நசுக்கி, சிறிய துண்டுகளாக பிய்த்து போடவும். (சின்ன கோழி கிடைக்கவில்லையென்றால், கோழிக்கறியையே சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
- வெறும் வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து, நைசாக பொடிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு, கோழியை அதில் போட்டு வதக்கவும்.
- வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
|
குறிப்பு:
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -