www.arusuvai.com
கோழிச்சாறு
எங்களூர் பக்கம், குழந்தை பிறந்த பின், குழந்தைக்கும், குழந்தை பெற்ற பெண்ணுக்கும் தலைக்கு தண்ணீர் விடும் அன்று இந்த ரசம் வைத்து குடிக்க கொடுப்பார்கள். இதனால் தாய்க்கும், குழந்தைக்கும் சளி பிடிக்காது, உடல் குளிர்ந்து போகாது. சாதாரணமாக சளி பிடித்தால் கூட இந்த சாறு வைத்து குடித்தால் உள்ளிருக்கும் சளி எல்லாம் வெளியே வந்து விடும்.
தேவையானப் பொருட்கள்
- கோழிக் குஞ்சு - 1/2 கிலோ,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 8 பல்,
- தக்காளி - 1,
- மிளகு - 1 மேசைக்கரண்டி,
- சீரகம் - 2 தேக்கரண்டி,
- தனியா - 2 தேக்கரண்டி,
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் - 2,
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - 1 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- கோழியை சுத்தம் செய்து, நசுக்கி, சிறிய துண்டுகளாக பிய்த்து போடவும். (சின்ன கோழி கிடைக்கவில்லையென்றால், கோழிக்கறியையே சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
- வெறும் வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து, நைசாக பொடிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு, கோழியை அதில் போட்டு வதக்கவும்.
- வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
-
குறிப்பு
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |