இது தாளிப்பதற்காக செய்யப்படும் வடகம். இது கொஞ்சம் கஷ்டமான ப்ராஸஸ். இந்த வடகத்தை நல்ல வெய்யில் காலத்தில்தான் செய்யவேண்டும். இப்போதெல்லாம் வீடுகளில் செய்வதைவிட கடைகளில் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லா பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் தாளிக்கும் வடகம் என்று கேட்டால் கிடைக்கும். வெளிநாடுகளில்கூட இந்தியன்ஸ்டோர்களில் கிடைக்கிறது.
தேவையானப் பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1 கி,
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 டம்ளர்,
கடுகு - 100,
சோம்பு - 100,
சீரகம் - 100,
வெந்தயம் - 100,
முழு பூண்டு - 5,
விரளி மஞ்சள் - 1 (அல்லது ) மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கப்,
விளக்கெண்ணெய் - 1/2 கப்.
செய்முறை
உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
கறிவேப்பிலையை நறுக்கவும்.
பூண்டு பல்லை தட்டி வைத்துக்கொள்ளவும்
விரளிமஞ்சளை அம்மியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறிய உளுத்தம்பருப்பை பிழிந்துவிட்டு போடவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, மற்றும் எல்லா சாமான்களையும் போட்டு பாதி அளவு விளகெண்ணையை ஊற்றி நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை நல்ல வெய்யிலில் 2 நாட்கள் காயவிடவும்.
2 நாட்கள் கழித்து எடுத்து உருண்டைகளை உடைத்து உதிர்த்துவிடவும்.
இதில் மீதி இருக்கும் விளகெண்ணெயை ஊற்றி பிசைந்து மறுபடியும் உருண்டைகளாக பிடித்து வெய்யிலில் காயவிடவும்
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -