தேவையான பொருட்கள்
- முளைகட்டுய பயறு - 1 கப்,
- வெள்ளரிக்காய் - 1,
- பச்சை முந்திரி - 15,
- பெரிய வெங்காயம் - 2,
- காய்ந்த மிளகாய் - 6,
- சீரகம் - 1தேக்கரண்டி,
- தனியா - 1 மேசைக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1/2 கப்,
- புளி - 1 கோலிகுண்டு அளவு,
- பூண்டு -4 பல்,
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- வெள்ளரிக்காயை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- முந்திரியை தோலை உரித்து வைக்கவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
- அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- முளைகட்டிய பயறு, வெள்ளரிக்காய், முந்திரி, அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- எல்லாம் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.
- உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்திற்கும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். பச்சை முந்திரி இங்கெல்லாம் கிடைக்கும். கிடைக்காவிடில், சாதா முந்திரியே உபயோகிக்கலாம்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
9 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -