தேவையானப் பொருட்கள்
- ஆட்டுக்கறி - 1/4 கிலோ,
- பெரிய வெங்காயம் - 1,
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி.
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
- பூண்டு - 5 பல்,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 4 தேக்கரண்டி.
- அரைக்க:
- -----------
- பச்சை மிளகாய் - 2,
- இஞ்சி - 1துண்டு,
- பூண்டு - 4 பல்,
- கொத்தமல்லி - 1 கைப்பிடி.
- வதக்கி அரைக்க:
- ---------------------
- தேங்காய் துருவல் - 1/2 கப்,
- பெரிய வெங்காயம் - 2,
- எண்ணெய் - 1 தேக்கரண்டி.
|
செய்முறை
- வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.
- ஆட்டுக்கறியைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து மட்டனில் பிசிறி 15 நிமிடம் வைக்கவும்.
- வதக்கி அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வதக்கி அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் ஊற வைத்த மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
- கறி நன்கு வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- கறி வெந்ததும், வதக்கி அரைத்த மசாலா சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்தில் கலந்து சாப்பிட, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -