தேவையானப் பொருட்கள்
- பாசுமதி அரிசி - முன்று டம்ளர்
- சிக்கன் - அரை கிலோ
- வெங்காயம் - நான்கு
- தக்காளி - முன்று
- தயிர் - கால் டம்ளர்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
- கொத்து மல்லி - கால் கட்டு
- புதினா - எட்டு இதழ்
- பச்ச மிளகாய் - நாலு
- மிளகாய் தூள் - ஒன்னேகால் தேக்கரண்டி
- எலுமிச்சை - அரை பழம்
- பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
- கிராம்பு - இரண்டு
- ஏலம் - ஒன்று
- எண்ணை - கால் டம்ளர்
- நெய் - ஒரு தேகக்ரண்டி
- உப்பு - தேவைக்கு
செய்முறை
- முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற விக்கவும்.
-
- சிக்கனை லெக் பீஸ் போட வேண்டாம் அது பிரை செய்தால் தான் நல்ல இருக்கும்..
- எலும்புடன் சேர்ந்த சிக்கனை அரை கிலோ கழுவி தண்ணீரை வடிகட்ட்வும்.
- எண்ணையை காய வைத்து பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்து மல்லி, புதினாவை பொடியாக நருக்கி போடவும்.
- பச்ச மிளகாயை இரண்டாகா ஒடித்து போடவும்.
- இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
- தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும்.
- சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசீயில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.
- தக்காளி சுருண்டவுடன் சிக்கனை போட்டு கிள்றை தயிரையும் சேர்த்து. நல்ல வேகவிடவும்.
- முடிபோட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருகும்.
- நல்ல வெந்து எண்ணை முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு.
- உலை கொதிக விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணை கொஞ்சமா லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கனும்.
- ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கிழே கொட்ட வேண்டாம்) அது தம் போடுவதற்கு தேவைபடும்.
- வெந்த சாதத்தை கிரேவியில் கொட்டி கிரேவியில் கொட்டி சமப்படுத்தி தம் போடவும்.
-
-
-
-
- இதற்கு தொட்டு கொள்ள , தயிர் சட்னி, எண்ணை கத்திரிகாய், சாலட் போன்றவை. ரொம்ப நல்ல இருக்கும்.
-
குறிப்பு
தம் போடும் முறை -
தீயை சிம்மில் வைத்து தம் போடும் கருவி (அ) கனமான தோசை தவ்வா வைத்து மேலே பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதன் மேல் கஞ்சி தண்ணீர் வைத்துள்ள சட்டியை வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து ரெட் கலர் பொடியை ஒரு ஸ்பூன் கஞ்சி தண்ணீரில் கரத்து தெளிக்கவும், ஒரு தேகக்ரண்டி நெய்யையும் பரவலாக விடவும்.
இப்போது லேசாக வெந்த சாதம், சிக்கன் கிறேவி எதுவும் உடையாமல் கீழிருந்து மேலாக இரு முறை பிறட்டி விட்டும் மீண்டும் ஐந்து நிமிடம் தம்மில் வீட்டு அடுப்பை அனைத்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் விட்டு பிறகு எடுத்து சாப்பிடவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 person |
25 min |
45 min |