தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 1/2 கிலோ,
- பால் - 1/2 கப் / 100 மிலி,
- சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி,
- பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
|
செய்முறை
- மைதா, சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும்.
- பாலை வெதுவெதுப்பாக்கி மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும். போதவில்லை யெனில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஈரத்துணியால் மூடி பிரிஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
- பிறகு எடுத்து உருண்டைகளில் குழி செய்து சிறிது எண்ணெய் விட்டு மூடி திரும்ப பிரிஜ்ஜில் வைக்கவும்.(குறைந்தது ஒரு மணி நேரம்)
- பெரிய வாணலியை நன்கு அடியில் தேய்து கழுவி விட்டு, அடுப்பில் குப்புற சூடு செய்யவும்.(அடி மேல் பக்கம் இருப்பது போல்)
- உருட்டு வைத்த உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்து, வாணலி மேல் போட்டு நன்கு சுட்டதும் எடுத்து நான்காக மடித்து, சூடாக பரிமாறவும்.
|
குறிப்பு:
இதற்கு பனீர் பட்டர் மசாலா, ஆலு கோபி, பனீர் மட்டர், சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
2 மணி நேரம் |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
29 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -