தேவையான பொருட்கள்
- அரிசி - 1/4 கிலோ,
- துவரம் பருப்பு - 150 கிராம்,
- கத்தரிக்காய் - 2,
- உருளைக்கிழங்கு - 1,
- கேரட் - 1,
- பச்சை பட்டாணி - 1 கப் (1/4 கிலோ),
- புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
- பெரிய வெங்காயம் - 1,
- தக்காளி - 2,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவைக்கேற்ப.
- வறுத்து பொடிக்க:
- ----------------------
- காய்ந்த மிளகாய் - 6,
- தனியா - 2 தேக்கரண்டி,
- பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி,
- கசகசா - 1 தேக்கரண்டி,
- மராட்டி மொக்கு - 1,
- மிளகு - 1/2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
- தாளிக்க:
- -----------
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி தழை - சிறிது,
- பெருங்காயம் - சிறிது,
- நெய் - 3 ஸ்பூன்,
- எண்ணெய் - 3 ஸ்பூன்.
|
செய்முறை
- அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேக விட்டு எடுக்கவும்.
- வெந்த சாதத்தை லேசாக மசிக்கவும்.
- வறுக்கக் கொடுத்துள்ளவைகளை 1/2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைக்கவும்.
- புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
- உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் சீவி, துருவி வைக்கவும்.
- புளித்தண்ணீரில் உப்பு, எல்லா காய்களையும், பட்டாணியையும் சேர்த்து வேக விடவும்.
- வெந்ததும் பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விடவும்.
- மசித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சாதம் தளர இருக்க வேண்டும்)
- வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, ஒரு கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி கிளறவும்.
- கொத்தமல்லி தூவி இறக்கவும்.
|
குறிப்பு:
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 27 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -