தேவையான பொருட்கள்
- கோழிக்கறி - 1/2 கிலோ,
- பெரிய வெங்காயம் - 3,
- தக்காளி - 3,
- தயிர் - 3 தேக்கரண்டி,
- இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
- தனியா தூள் - 2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி,
- முந்திரி - 15,
- நெய் - 1 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி - சிறிது,
- சோம்பு - 1/2 தேக்கரண்டி,
- கசகசா - 1 தேக்கரண்டி,
- பட்டை - 1 துண்டு,
- கிராம்பு - 2,
- ஏலக்காய் - 2,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
|
செய்முறை
- கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும், சிக்கன் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 1 நிமிடம் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் தயிர் சேர்த்து கிளறி, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, 1 தம்ளர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
- சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், உருக்கிய நெய், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
|
குறிப்பு:
நெய் மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த சிக்கனை சாதம், ரொட்டி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 8 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
22 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் முன்பு -