தேவையானப் பொருட்கள்
- புளி-1 எலுமிச்சை அளவு
- 100 கிராம் மொச்சைக் கொட்டை-பச்சைப் பயிறு அல்லது காய்ந்தது
- கத்தரிக்காய்-5 அல்லது 6
- வெங்காயம்-100 கிராம்
- தக்காளி-100 கிராம்
- கருவாடு-100 கிராம்
- குழம்புப் பொடி-4 டீஸ்பூன்
- தாளிக்க
- கடுகு-2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய்-6
- வெந்தயம்-1/2 டீஸ்பூன்
- பெருங்காயம்-1 டீஸ்பூன்
- பட்டை-2
- கிராம்பு-4
- எண்ணெய்-1/2 கப்
|
செய்முறை
- ஒரு கனமான வாணலியில், எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பு சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
- பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பின், கத்தரிக்காய் மொச்சைக் கொட்டையையும் போட்டு வதக்கவும். பின் புளியையும் கரைத்து விட்டு, உப்பு, குழம்புப் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
- தளதளவென்று கொதி வந்தவுடன் நன்றாகக் கழுவிய கருவாட்டையும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின் நன்றாக ஒரு சேர கொதித்தவுடன் பரிமாறவும்.
|
வழங்கியவர்
குலசை சுல்தான், சென்னை
சமீபத்தியக் கருத்துக்கள்
23 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
5 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
7 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -