தேவையானப் பொருட்கள்
- முழு கோழி - இரண்டு
- அரிசி - அரை கிலோ (இரண்டறை ஆழாக்கு)
- எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
- பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
- ஏலம் - முன்று
- கிராம்பு - நாலு
- வெங்காயம் - முன்று
- தக்காளி - முன்று
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை டேபுள் ஸ்பூன்
- பட்டர் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
செய்முறை
- முழு கோழியை சுத்தம் செய்யவும்.
- அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
- அதைல் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் முனே முக்கால் அளவு வருது நான்கு டம்ளரக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.
- வேக வைத்து அந்த தண்ணீரை தணியாகவும் கோழியை தனியாகவும் வைகவும்.
- சட்டியை காயவைத்து அதைல் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு மணம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.சிவறவேண்டாம்.
- பிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை தளித்ததில் ஊற்றவும் .
- கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிகவிட்டு வெந்து வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும்.
-
- இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.
-
-
-
-
-
-
-
குறிப்பு
அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். பிரியாணி கூடா மசாலா அவ்வளவாக இருக்காது,கொழியோ கறியோ முழுசா சட்டியி போட்டு தான் வேக விடுவார்கள்.
நோன்பு கஞ்சிக்கு கூட நாம் கீமா போடுவோம் அவர்கள் அப்பட்டியே முழுசா போட்டு ரொம்ப நேரம் வேக விட்டு செய்வார்கள்.மசாலா அதிகம் சேர்க்க மாட்டார்கள்.ஆனால் ரொமப் மஸ்த்(வெவி) இந்த சாதம்.செய்து பாருங்கள்.சிலருக்கு கோழியை போட பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே பட்டரில் வருத்து மசாலா எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவார்கள்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
20 நிமிடம் |
45 நிமிடம் |