இது பெரும்பாலும் பெரு நாள் அன்று எங்கள் ஊரில் செய்வது வழக்கம்.
தேவையானப் பொருட்கள்
- அரிசி மாவு -250 மில்லி
- தேங்காய் - 1
- முட்டை - 1
- உப்பு - சிறிது
- நெய் - தேவைக்கு
செய்முறை
- முதலில் தேங்காயை துறுவி கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும்.
-
- பின் அந்த தேங்காய் பாலில் உப்பு,முட்டை சேர்த்து நன்கு கலக்கி மாவையும் சேர்த்து ரொட்டி மாவு போல நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
-
- அடுப்பில் பொறிக்கும் சட்டியை வைத்து சிறிது நெய் ஊற்றி மாவில் சிறிய அளவு உருண்டை செய்து கையில் வைத்து வட்டமாக தட்டி பொறிக்கும் சட்டியில் போட்டு தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.
-
- ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
-
-
குறிப்பு
இதற்க்கு கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.