www.arusuvai.com
ருசியான சாம்பார்
இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் சைடிஷ். ஹோட்டல் சாம்பார் சுவையிலேயே இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- துவரம்பருப்பு-ஒரு ஆழாக்கு
- பெரிய வெங்காயம்-இரண்டு
- தக்காளி-இரண்டு
- கறிவேப்பிலை-சிறிதளவு
- பூண்டு-பத்து பல்
- பச்சை மிளகாய்-நான்கு
- சாம்பார் வெங்காயம்-ஒரு கப்
- புளி-எலுமிச்சை அளவு
- உப்பு-தேவைக்கேற்ப
- மிளகாய்ப்பொடி-இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள்தூள்-ஒரு சிட்டிகை
- அரைக்க:
- பெரிய வெங்காயம்-ஒன்று
- தக்காளி-ஒன்று
- தேங்காய்-அரை கப்
- கொத்துமல்லி-ஒரு கப்
- தாளிக்க:
- கடுகு-ஒரு தேக்காரண்டி
- கறிவேப்பிலை
செய்முறை
- பிரஷர் பேனில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து நன்கு மசிக்கவும்.
- அரைக்க கூறிய பொருட்களை சிறிது நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நீர் சேர்த்து வேகவிடவும்.
- அதில் புளிக் கரைசல், பச்சை மிளகாய்,உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பிறகு மசித்த பருப்பு கலவையை அதில் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
- அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- சாம்பாரை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
- கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
சமைக்கும் நேரம்
|
|
அரைமணி நேரம் |