தேவையானப் பொருட்கள்
- புரோகோழி - 1 பெரியது (500 g)
- மாஜரின் - 1 மே.க
- உப்பு - 1/2 தே.க
- தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை
- புரோக்கோழியை அப்படியே பெரிய பெரிய மொட்டாக தண்டுடன் வெட்டவும். கீழ்த் தண்டையும் பாதியாக பிளந்து வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்டுப்பகுதி கீழே நிற்கும்படியாக மொட்டுக்களை அடுக்கவும்.
- உப்பைத் தண்ணீரில் கரைத்து விடவும் .
- மாஜரினையும் போட்டு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்தபின், 5 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின் அடுப்பை நிற்பாட்டவும். மேலும் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மூடியை நீக்கி விடவும்.
- ஒரு தடவை மெதுவாக குலுக்கி, பிரட்டி விடவும்.
- தொடர்ந்து மூடியபடி இருந்தால் அவிந்து கரைந்துவிடும், சுவை போய்விடும்.
- கடும் பச்சை நிறமாக இருந்தால்தான் சுவையாக இருக்கும்.
- ஆறியதும் சாப்பிடலாம்.
குறிப்பு
தண்டை மெதுவாக குத்திப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவிந்துவிட்டதா என்று. இதை பச்சையாககூட உண்கிறார்கள்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நிமிடங்கள் |
12 நிமிடங்கள் |