உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மணத்தக்காளி கீரை கூட்டு

 

இது வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும், பிள்ளை பெற்றவர்களுக்கும் நல்லது.

தேவையானப் பொருட்கள்

  • மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு
  • பாசி பருப்பு - ஐம்பது கிராம்
  • சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
  • தக்காளி - ஐம்பது கிராம்
  • எண்ணை - ஒரு தேக்கரண்டி
  • நெய் - ஒரு தேக்கரண்டி
  • காஞ்ச மிளகாய் - முன்று
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - முன்று பல் (தட்டி கொள்ளவும்)
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால்தேக்கரண்டி
  • உப்பு - முக்கால் தேக்கரன்டி
  • தேங்காய் துருவியது - இரண்டு மேசை கரண்டி

செய்முறை

  • மணத்தக்காளி கீரையை சுத்தமாக மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • பாசி பருப்பை லேசாக வருத்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் பாசிபருப்பையும், கீரையையும் போட்டு மஞ்சள் பொடி, கால் தேக்கரன்டி
  • உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைகவும்.
  • ஒரு வானலியில் எண்ணையை ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு,சீரகம்,வெந்தயம் போட்டு பூண்டையும்,காஞ்ச மிளகாயையும் தட்டி போட்டு வதக்கி சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • பிறகு உப்பு அரை தேக்கரண்டி, தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து துருவிய தேங்காயையும் சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு நெய் விட்டு கிளறி விட்டு இரக்கவும்.

வழங்கியவர்

Jaleela

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 person 15 min 20 min
random food image


comments