இந்த வாடா வடை வைகையைச் சார்ந்தது. இதன் பெயரில் மரியாதை இல்லாததை போல தோன்றினாலும் இதன் ருசி மிகவும் சுவை மிக்கது. எங்கள் ஊர் காயல்பட்டணத்தின் ஸ்பெஷல் இந்த வாடா.இதை செய்வதற்க்கு கொஞ்சம் மெனகெடனும் செய்து சாப்பிட்டுவிட்டால் இதன் ருசி உங்களை விடாது.
தேவையானப் பொருட்கள்
- அரிசிமாவு - 1 கப்
- தேங்காய் - 1/4 மூடி (துறுவியது)
- மஞ்சள் தூள் - சிறிது
- எண்ணெய் - பொரிக்க
- உப்பு - தேவைக்கு
- பூரணத்திற்க்கு :
- வெங்காயம் - 3 சுமாரானது
- பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
- தேங்காய்பூ - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- மஞ்சள் தூள் - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
- கீரைப்பொடி - 2 தேக்கரண்டி
- மாசித்தூள் - 1 தேக்கரண்டி
- இரால் - 15 வரட்டியது
- மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி (காரம் அதிகமாக தேவையானால்)
செய்முறை
- முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் பூரணம் தயார் செய்துக்கொள்ளவும்.
-
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி,அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு,வரட்டிய இரால் இவற்றை சேர்த்து வைக்கவும்.
-
- இவற்றை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வைத்து வதக்கவும் தேவையானால் சிறிது நீர் தெளித்துகொள்ளலாம்.
-
- நன்கு வெந்ததும் இறக்கி மாசித்தூளும்,கீரைப்பொடியும் சேர்த்து நன்கு பிரட்டி ஆறவிடவும்.
-
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 கப் ஊற்றி கொதிக்கவிடவும்.பின் தேங்காய் பூ,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதித்ததும்,அரிசிமாவை போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
-
- பின் ஒரு மர அகப்பையால் நல்ல கிண்டி ஆறியதும் ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
-
- மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
-
- பின் இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின் மேல் செய்து வைத்த பூரணத்தை ஒரு மேசைக்கரண்டி அளவு வைத்து அதன் மேல் தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சுற்றிவர ஒட்டிவிடவும் மாவு பிய்ந்தால் பொரிக்கும் போது உள்ளே வைத்த பூரணம் வெளியில் வந்துவிடும்.அதனால் கவனமாக ஒட்டிவிடவும்.
-
- இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி தட்டிய ஒரு வட்டத்தின் மேல் பூரணத்தை வைத்து அதன் மேல் மற்றொரு தட்டிய வட்டத்தை வைத்து மூடிவிடவும்.
-
- பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்.
-
- மிகவும் சுவையான மஞ்சள் வாடா தயார்.
-
குறிப்பு
இரால் பெரியதாக இருந்தால் நறுக்கி சேர்க்கலாம். சிறியதாக இருந்தால் முழுசாகவே சேர்க்கலாம். முதல் முறையாக வாடா தட்டுறது செய்யும் போது உடனே வந்துவிடாது செய்து பார்க்க பழகிடும். முதலில் தட்டுவதற்க்கு சிரமமாக இருக்கும்.மாவு ஒட்டிக்கும் இல்லைன்னா பூரணம் வைக்கும் போது பிய்ந்துவிடும் அப்படி இருந்தால் ஒன்னு மாவு கெட்டியாக இருக்கா, இல்லைனா மாவு தண்ணியாக இருக்கான்னு பாருங்க இதற்க்கு மாவு கிண்டுறதுதான் கொஞ்சம் பக்குவமாக செய்யனும்.
காட்டண் துணியை அப்படியே விரித்து விடாமல் தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்துவிட்டு அதை விரித்து அதன் பிறகு மாவு தட்ட ஆரம்பிக்கவும்.
வாடா தட்டி பூரணம் வைத்து எல்லாம் செய்து சுடுறதுக்கு எடுக்கும் போது கையால் பிய்த்து எடுக்காதீர்கள் துணியை ஓரத்தில் தூக்கினால் ஈஸியாக எடுக்க வரும்.
அதே போல் வாட எல்லா வற்றையும் தட்டி வைத்து விட்டு பொறிக்கவும் நினைக்காதீர்கள் காய்ந்துவிட்டாலும் சிரமம்.அதனால் முதல் முறையாக செய்யும் போது ஒரு 3 வாடா செய்துவிட்டு பொரிக்க ஆரம்பியுங்கள்.
பழகின பின்னாடி நீங்க வாடாவை தட்டிக்கொண்ட்டே ஒரு கையால் பொரித்து எடுக்கலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 பேர் |
1 மணி நேரம் |
1/2 மணி நேரம் |