இது இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில் செய்யும் சமையல் காரர்களின் அளவு.
தேவையானப் பொருட்கள்
- பாசுமதி அரிசி - இரண்டு கிலோ
- கோழி - முன்று முழு கோழி
- தக்காளி - 600 கிராம்
- வெங்காயம் - 600 கிராஅம்
- இஞ்சி - 200 கிராம்
- பூண்டு - 100 கிராம்
- தயிர் - 20 மில்லி
- கொத்து மல்லி தழை - ஒரு கட்டு
- புதினா - அரை கட்டு
- பச்ச மிள்காய் - ஐம்பது கிராம்
- மிளகாய் தூள் - ஐம்பது கிராம்
- எலுமிச்சை - இரண்டு
- பட்டை - இரண்டு அங்குல துண்டு ஐந்து
- கிராம்பு - - எட்டு
- ஏலம் - ஐந்து
- எண்ணை - 250 மில்லி
- டால்டா - 250 மில்லி
செய்முறை
-
- சிக்கனை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்
-
-
- முதலில் பெரிய பிரியாணி சட்டியை காய வைத்து அதில் எண்ணை + டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம்,கிராம்புவை போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் பூண்டை போட்டு வதக்கி ஐந்து நிம்டிஅம் சிம்மில் வைக்கவும்.பிறகு கொத்துமல்லி புதினா போட்டு இஞ்சியையும் போட்டு வதக்கவேண்டும்.
- தாளிப்பு பொன் முருவலாகனும், கலர் மாறியதும் தக்காளி பச்ச மிள்காயை போட்டு ஐந்து நிமிடம் சிம்மில்வைக்க வேண்டும்.
- தக்காளி மடங்கியதும், உப்பு, மிள்காய் தூள் போட்டு நல்ல வேக விடவேண்டும்.
- வெந்ததும் வடித்து வைத்துள்ள சிக்கனை போட்டு நல்ல மசாலா எல்லா இடத்திலும் சேருமாரு பிறட்டி தயிரையும் அடித்து ஊற்றி ,ஒன்னறை எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கிளறவும்.
- இப்போது எல்லம் நல்ல வெந்து எண்ணை மேலே மிதக்கும் வரை விடவும் எப்படியும் 20 நிமிடத்தில் வெந்து விடும்.
-
- நல்ல பெரிய வாயகன்ற சட்டியை 2 கிலோவிற்குற்கும் பெரிய சட்டியாக இருக்கனும் அப்ப தான் கொதிக்கும் போது அரிசி சிக்காமல் உதிரியாகவரும்.
- உலையை கொதிக்கவிட்டு ஊறவைத்துள்ள அரிசியை தண்ணீரை வடித்து போட்டவும்.
- கொதித்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை, அரை எலுமிச்சை சாறு பிழிந்து ஊற்றி முக்கால் பதத்தில் பெரிய கண் வடிகட்டியில் வடித்து கிரேவியில் கொட்ட வேண்டும்.
- சாதத்தை சமப்படுத்தி டம் போட வேண்டும் அடுப்பின் மேல் தோசை தவ்வா (அ) தம் போடும் கருவி வைத்து சாதம் கலந்த கிரேவி சட்டி வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி தண்ணீரை அதன் மேல் ஏற்றி விடவேண்டும்.
- ஐந்து நிமிடம் கழித்து கலர் பொடி கொஞ்சம தண்ணீரில் கரைத்து ஊற்றி தெளித்து லேசாக பிறட்டி மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விட வேண்டும்.
- சுவையான கம கமன்னு மணக்கும் சிகன் பிரியாணி ரெடி.
-
-
-
-
-
-
குறிப்பு
இதற்கு தொட்டு கொள்ளஎண்ணை கத்திரிக்காய் (அ) கத்திரிக்காய் தொக்கு, தக்காளி ஹல்வா(அ) பீட்ரூட் ஹல்வா, தயிர் சட்னி, ம்ம் ஜமாயுங்கோ.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
12 லிருந்து 13 நபர்களுக்கு |
30 நிமிடம் |
ஒரு மணி நேரம் |