www.arusuvai.com
பிரியாணி கஞ்சி
தேவையானப் பொருட்கள்
- பிரியாணி கஞ்சிக்கு முதலில் கறியில் அகனி செய்து வைக்கவும்.அகனிகறி செய்வது எப்படி என்கிற செய்முறை இந்த லிங்கில் உள்ளது.http://www.arusuvai.com/tamil/node/3234
- உருளைகிழங்கு - 100 கிராம்
- கேரட் - 100 கிராம்
- தக்காளி - 2
- அரிசி - 1 கப்
- சிறு பருப்பு - 1/4 கப்
- பச்சைமிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- நெய் - தாளிப்புக்கு
- கருவேப்பிலை - சிறிது
- இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- கருவா - ஒரு துண்டு
- ஏலம் - 2
- கிராம்பு - 2
- தேங்காய் பால் - 1/2 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது தாளிப்புக்கு
செய்முறை
- முதலில் காய்கறியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பின் தக்காளியையும் சேர்த்து நறுக்கி குக்கரில் நறுக்கியவற்றை சேர்த்து அதில் கழுவிய அரிசி,பருப்பு இவற்றை சேர்த்து,கீறிய பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கி ஆறவிட்டு செய்துவைத்த அகனியில் உள்ள கருவேப்பிலை,பச்சைமிளகாய்,கருவா,கிராம்பு,ஏலம் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு காய்கறியுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.
-
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் கருவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதித்ததும் இறக்கவும் சுவையான பிரியாணி கஞ்சி தயார். தேவையானால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 நபர்கள் |
30 நிமிடம் |
30 நிமிடம் |