பீட்ரூட் இலை சாம்பார் |
அறுசுவையில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. விஜி அவர்களின் குறிப்பு இது. இவர் தமிழ் நன்கு அறிந்த மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குறிப்புகள் தொடர்ந்து அறுசுவையில் இடம்பெறும்.
|
|
|
தேவையானப் பொருட்கள்
- பீட்ரூட் இலை & தண்டு - 10 அல்லது 15
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பெரிய தக்காளி - ஒன்று
- வேக வைத்த துவரம் பருப்பு - ஒரு கப்
- புளி - நெல்லிக்காய் அளவு
- கடுகு - அரை தேக்கரண்டி
- பெருங்காயம் - கால் தேக்கரண்டி
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 5 இலைகள்
- பட்டை மிளகாய் - ஒன்று
- உப்பு - தேவையான அளவு
|
முதலில் பீட்ரூட் இலைகளை நன்றாக கழுவி, பொடியாக அரியவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
|
 |
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து பின்னர் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
|
 |
தக்காளி நன்கு வதங்கிய பிறகு பீட்ரூட் தண்டுகளை சேர்க்கவும்.
|
 |
அத்துடன் பொடியாக அரிந்து வைத்துள்ள பீட்ரூட் இலைகளையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
|
 |
பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
|
 |
புளித்தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன், வேகவைத்த பருப்பையும் போட்டு, சாம்பார் பொடியும் போட்டு 20 நிமிடம் வேகவிட வேண்டும்.
|
 |
கடைசியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்க வேண்டும்.
|
 |
இப்போது சுவையான பீட்ரூட் இலை சாம்பார் ரெடி. இதனை சாதத்திற்கு ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
|
 |
|
|
|
|
|
|
|
|
இந்த இலையில் பொரியல் செய்யலாம். தண்டை மட்டும் சேர்த்து சாம்பார் செய்யலாம். கூட்டும் செய்யலாம்.
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -