தேவையானப் பொருட்கள்
- கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப் ஊறவைத்தது
- எண்ணை - 3 ஸ்பூன்
- ஜீரகம் - 1/2 ஸ்பூன்
- வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
- கறிவேப்பிலை - 2 இனுக்கு
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி&பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- தக்காளி - 1 பெரியது
- மல்லி இலை பொடியாக நறுக்கியது - ஒரு கைப்பிடி
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- குருமிளகுத் தூள் - 3/4 ஸ்பூன்
செய்முறை
- கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து அடுத்த நாளுக்கு தண்ணீர் வடித்து வைய்யுங்கள்.
- பின் எண்ணையை காயவைத்து அதில் ஜீரகம் இட்டு பொரிந்ததும் வெங்காயம் ,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் இட்டு பொன்னிறமாக வதக்கவும்
- பின் இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின் மீதம் கொடுத்துள்ள பொடிகளை சேர்த்து 1 ஸ்பூன் உப்பும் சேர்த்து கடலையை இட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் 1.5 கப் சேர்த்து குக்கரில் இட்டு 7 விசில் விடுங்கள்.
- பிறகு ஆவி அடங்கியதும் இறக்கி பார்த்தால் திக்கான கடலை குழம்பு இருக்கும்.இது திக்காக சாப்பிட்டால் தான் சுவை..கொஞ்சம் நீர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் அதிலிருந்து 1/4 கப் கடலையை எடுத்து மிக்சியில் அடித்து அதிலேயே ஊற்றி தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைய்யுங்கள்.
- சுவையான கடலைக் குழம்பு ரெடி
-
-
குறிப்பு
சுவையில் சிக்கனோ மட்டனோ செய்தது போல இருக்கும்.நான் வெஜ் விரும்பிகளுக்கு ஏற்றது
இது அப்பம்,இடியப்பத்திற்கு,புட்டு,அடை,பரோட்டா வுக்கெல்லாம் பொருந்தும்