தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - இரண்டு கப்
- எண்ணை + பட்டர் - 50 மில்லி
- வெங்காயம் - 50 கிராம்
- தக்காளி - ஒன்று
- கடலை பருப்பு - 50 கிராம்
- அரை கீரை - அரை கட்டு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- கொத்து மல்லி புதினா - சிறிது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
- உப்பு - தேவைக்கு
- பச்ச மிளகாய் - இரண்டு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
|
செய்முறை
- அரிசியையும்,கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
- கீரை கொத்து மல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும்.
- வெங்காயத்தை நீள வாக்கிலும் தக்காளியை நான்காகவும் அரிந்து வைக்க வேண்டும்.
- குக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணை+பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலத்தை பொட்டு மணம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவற விட வேண்டாம்.
- பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்,பச்ச மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்துமல்லி புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி இரண்டு கப் அரிசிக்கு முனறை கப் தண்ணீர் உற்றவும்.
- தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நாலாக நருக்கிய தக்காளி,கீரையை போட்டு,மஞ்சள் தூள், உப்பும் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இரக்கி விடவேண்டும்.
- சுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்
|
குறிப்பு:
இது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுக்க, மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நல்ல இருக்கும்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
ஐந்து நபர்களுக்கு |
30 நிமிடம் |
20 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 53 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -