உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கடலை பருப்பு கீரை சாதம்



தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி - இரண்டு கப்
  • எண்ணை + பட்டர் - 50 மில்லி
  • வெங்காயம் - 50 கிராம்
  • தக்காளி - ஒன்று
  • கடலை பருப்பு - 50 கிராம்
  • அரை கீரை - அரை கட்டு
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • கொத்து மல்லி புதினா - சிறிது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
  • பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
  • உப்பு - தேவைக்கு
  • பச்ச மிளகாய் - இரண்டு
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

  • அரிசியையும்,கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • கீரை கொத்து மல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும்.
  • வெங்காயத்தை நீள வாக்கிலும் தக்காளியை நான்காகவும் அரிந்து வைக்க வேண்டும்.
  • குக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணை+பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலத்தை பொட்டு மணம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவற விட வேண்டாம்.
  • பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்,பச்ச மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்துமல்லி புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி இரண்டு கப் அரிசிக்கு முனறை கப் தண்ணீர் உற்றவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நாலாக நருக்கிய தக்காளி,கீரையை போட்டு,மஞ்சள் தூள், உப்பும் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இரக்கி விடவேண்டும்.
  • சுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்

குறிப்பு:

இது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுக்க, மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நல்ல இருக்கும்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஐந்து நபர்களுக்கு 30 நிமிடம் 20 நிமிடம்
  random food image


comments