தேவையானப் பொருட்கள்
- பச்சை ஆப்பிள் - 1 (பழமாக இல்லாமல் காயாக பார்த்து வாங்கவும்)
- மிளகாய்ப் பொடி - 1 டீஸ் ஸ்பூன்(காரம் தேவை என்றால் 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்)
- கடுகு - 1 டீஸ் ஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 மேஜை கரண்டி
- எலுமிச்சை பழச்சாறு - 1 மேஜை கரண்டி
- கறிவேப்பிலை - 1 கீற்று
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- 1.பச்சை ஆப்பிள்ளை நன்றாக கழுவி பல்லு பல்லாக மெலிதாக நறுக்கி கொள்ளவும்
-
- 2.நறுக்கிய ஆப்பிள்களை ஒரு பாத்திரத்தில் கொட்டி ,எலுமிச்சை பழச்சாறு, தேவையான அளவு உப்பு தூவி கிளறி வைக்கவும்
-
- 3.அடுப்பில் கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் விட்டு,அதில் கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து பின் மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போட்டு நுறை வந்தவுடன் இறக்கி விடவும்
-
- 4.தாளிப்பை ஆப்பிள் கலவையுடன் கலந்து கிளறவும்
-
- 5.சுவையான பச்சை ஆப்பிள் பச்சடி தயார்
-
-
குறிப்பு
மாங்காய் கிடைக்காத நேரத்தில் இந்த பச்சை ஆப்பிள் கிடைக்கும் ஆயின் இதனை செய்து பாருங்கள். வெளிநாடுகளில் இந்த பச்சை ஆப்பிள் கிடைக்கும். இதுவும் தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும். நான் வசிக்கும் சீனாவில் மாங்காய் அதிகம் கிடைக்காது,அதனால் பச்சை ஆப்பிளை பச்சடி ஆக்கினேன் அது ஒரு வித சுவை.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 |
10 min |
3 min |