எல்லா கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்
- கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு அல்லது பயத்தம்பருப்பு - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
- கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியிலோ, பாத்திரத்திலோ கீரையைப்போட்டவும்.
- கல் உப்பையும், சீரகத்தையும் கையால் நிரடி கீரையில் போடவும்.
- வெந்ததும் மத்தால் மசித்து வெந்த பருப்பை சேர்த்துக் கலந்து தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
குறிப்பு
என் பாட்டியின் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இந்தக்கீரை மசியலும் ஒன்று.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடங்கள். |
10 நிமிடங்கள். |