புளி ரசம் அடிக்கடி சாப்பிட கூடாது.இரத்ததில் புளிப்பின் அளவு அதிகரித்து விடும்.ஆகையால் தக்களி ரசம் , மோர் ரசம், எலுமிச்சை ரசம் , பிளம்ஸ் ரசம், அன்னாச்சி ரசம், வேப்பம் பூ ரசம் என்று வகை வகையாக செய்து சாப்பிடலாம்.
தேவையானப் பொருட்கள்
- துவரம் பருப்பு - கால் டம்ளர்
- தக்காளி - ஒன்று பெரியது
- ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்
- எலுமிச்சை - ஒரு பழம்
- கொத்து மல்லி - சிறிது
- தாளிக்க
- -------
- எண்ணை - இரன்டு தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- பொடித்து தூவ
- --------------
- மிளகு - கால்தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- தனியா - கால் தேக்கரண்டி
செய்முறை
- பருப்பை குழைய வேகவைக்க வேண்டும்.
- தக்காளியை நன்கு பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதி வந்து தக்காளி வெந்ததும் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- பிறகு மிளகு ,சீரகம்,தனியாவை பொடித்து சேக்க வேண்டும்.
- கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
- கடைசியில் எலுமிச்சை பழ சாற்றை பிழிய வேண்டும்.
-
-
குறிப்பு
எலுமிச்சை ரத்திற்கும்,எலுமிச்சை சதத்திற்கும் எலுமிச்சையை பிழிந்து கொதிக்க விட்டக்கூடாது.