| சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை
சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் இட்லி, தோசை,
பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும்
சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக
இந்த வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. இந்த அவசர யுகத்தில் பலர் மதிய
உணவிற்கும் சிற்றுண்டியை தேட வேண்டிய நிலை உள்ளது. |