|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிருதுவாக இருக்குமாறு நன்கு பிசைய வேண்டும்.
-
பிசைந்த மாவினை மெல்லிய சப்பாத்திகளாய் தேய்த்து கொண்டு ஒரு பிஸ்கட் கட்டர் கொண்டு சிறிய பிஸ்கட் அளவு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்.
-
இந்த சிறிய பூரிகளை சுமார் இரண்டு மணிநேரம் வெயிலில் உலர்த்தவும்.
-
பட்டாணியை குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு மற்றும் ஏலப்பொடி போட்டு வதக்கவும்.
-
வெங்காயம் வதங்கி சிவந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துப் பிரட்டவும்.
-
சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், ஊறவைத்து எடுத்த பட்டாணி ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்புச் சேர்த்து வேகவிடவும்.
-
காய்கள் நன்கு வெந்ததும் மசித்த தக்காளியையும் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து வேகவிடவும்.
-
குருமா மிகவும் கெட்டியாகிவிடாமல், தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
-
பிறகு காய வைத்துள்ள மினி பூரிகளை குருமாவில் போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
-
நன்கு வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|