தேதி: February 14, 2009
பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சேனைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 3- 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பட்டை- சிறிய துண்டு
கிராம்பு - 1
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கு
முதலில் தோலை பெரிய கத்திக்கொண்டு சீவிக்கொள்ளவேண்டும். சதுர துண்டுகளாய் போட்டு அரிசிக்கழனியில் போட்டு வைக்கவும். பின்பு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
பட்டை, சோம்பு, கிராம்பு, வற்றல் வறுத்து தூள் செய்யவும். பின்பு அத்துடன், தேங்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சேனைக்கிழங்கில் பிசறி இட்லி பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வேக வைத்த மசாலாவுடன் கூடிய சேனைகிழங்கை சேர்க்கவும்.
பிரட்டி பிரட்டி முறுக வைக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான சேனை சாப்ஸ் ரெடி.
Comments
HEART OF THANKS TO ARUSUVAI.COM
SIR/MADAM,
I TRY THIS DISH TODAY. IS VERY NICE. ALL ARE APPRECIATING.. HEART OF THANKS FOR GIVING VARIETY OF TIPS FOR NEW BEGINERS OF COOKING WITH PHOTOS IS TOO NICE.
THANKYOU.
HEART OF THANKS TO ARUSUVAI.COM.
தீபா,
உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.நானும் அடிக்கடி செய்யும் ரெசிப்பி இது.செமை டேஸ்டாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.