தேதி: March 21, 2009
இந்த அழகிய, பூங்கொத்தை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.
பீர்க்கங்காய் நாரு
காய்ந்த சோள இலைகள்
வெள்ளை மணி
நூல்
அலுமினிய கம்பி (தங்க நிறத்தில்)
பேப்பரிக் கலர் - பச்சை, சிவப்பு
பச்சைநிற கம் டேப்
பீர்க்கங்காய் பொக்கே செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பீர்க்கங்காய் நாரில் மூன்று கோடுகள் இருக்கும். அதன் மேலேயே கத்திரிக்கோலால் முக்கால் பாகம் வரை வெட்டிக் கொள்ளவும். அந்த நாரு விரிவடையும் அளவிற்கு வெட்டிக் கொண்டால் போதும்.

இது பார்க்க மூன்று இதழ்கள் போல் இருக்கும். நடுவில் உள்ள பகுதியை மட்டும் அடியோடு வெட்டி எடுத்து விடவும்.

வெட்டி வைத்திருக்கும் இதழின் உள்பகுதியை தவிர மற்ற இடங்கள் முழுவதும் சிவப்பு நிற பெயிண்டை அடிக்கவும்.

காய்ந்த சோள இலைகளில் பச்சை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை கலந்து தோளின் இருப்பக்கமும் பெயிண்ட் பண்ணவும். இருமுறை கோட்டிங் கொடுக்கவும்.

26cm, 16cm, 12cm, 10cm அளவுக்கு தலா இரண்டு கம்பிகள் என்ற வீதம் வெட்டி எடுத்துக் கொள்ளவும்

ஒவ்வொரு கம்பியின் முனையிலும் ஒரு மணியை கோர்த்து கம்பியை மடித்து விட்டு முறுக்கி விடவும்

எல்லா அளவு கம்பிகளிலிருந்து ஒவ்வொன்றை எடுத்து ஒன்றாக சேர்த்து வைத்து அடியில் நூலால் முடிச்சு போட்டு கொள்ளவும்.

முடிச்சு போட்டு வைத்திருக்கும் கம்பிகளை பீர்க்கங்காய் நாரின் நடுவில் சொருகவும்.

பீர்க்கங்காய் நாரின் அடிப்பகுதியில், பெயிண்ட் அடித்து வைத்திருக்கும் சோள இலைகளை மூன்று பக்கமும் வைத்து நூலால் முடிச்சு போட்டுக் கொள்ளவும் அல்லது ஒட்டி விடவும்.

பின்னர் முடிச்சு போட்டிருக்கும் இடத்திலிருந்து பச்சை நிற கம் டேப்பை கம்பிகளின் நுனிவரை சுற்றிக் கொள்ளவும்.

இதே போல் இரண்டு பூக்கள் செய்துக் கொள்ளவும்.

அவரவர் விரும்பித்திற்கு ஏற்றாற் போல், ஜாடிகளில் செய்து வைத்திருக்கும் பீர்க்கங்காய் பூக்களை வைத்து அலங்கரித்து கொள்ளலாம்.

Comments
சூப்பரா இருக்கு!!
ஜீவா மோகன் உங்க பூங்கொத்து சூப்பராயிருக்கு.பீர்க்கங்காய் நாரில் அழகா செய்திருக்கிங்க!!
ஜீவா பூங்கொத்து சூப்பர்
மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல அழகாகச் செய்திருக்கிறீங்கள்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
பூங்கொத்து
ஜீவா,
மிகவும் அழகாக இருக்கிறது. நல்ல கற்பனை. :-)
(செய்து வைக்க ஆசைதான். பீர்க்கங்காய் நாருக்கு எங்கே போவது!! பார்க்கலாம்.)
இமா
- இமா க்றிஸ்
இமா,
எப்படி இருக்கிறீங்க இமா?
god is my sheperd
ஜீவா
ரொம்ப நன்றாக இருக்கு, உங்க கைவினையை ரொம்ப நன்றாக செய்து கான்பித்திருக்கிங்க.
அருமை !
ரொம்ப அருமையாக செய்து இருக்கீங்க.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஜீவா மோகன்.
ஜீவா மோகன் உஙகள் ஆக்கம் மிகமிக அருமை.
இன்னும் பல ஆக்கங்கள் வெளியிடுங்கள்.
வாழ்த்துக்கள்.
செபா.
இமா
மிகவும் அழகாக இருக்கிறது. நல்ல கற்பனை. :-)
(செய்து வைக்க ஆசைதான். பீர்க்கங்காய் நாருக்கு எங்கே போவது!! பார்க்கலாம்.)
enna இமா eppoluthu paarththaalum neenga try pannave maattinkirenga
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta