தேதி: January 8, 2010
உபயோகமற்ற வாட்டர் பாட்டில் - ஒன்று
ஃபேப்பரிக் பெயிண்ட்
கருப்புநிற ஸ்கெட்ச் பேனா
சாட் அட்டை
உல்லன் நூல்
பச்சைநிற கம் டேப்
உபயோகமற்ற பேனாவின் உறை
பெரிய அளவில் உள்ள கலர் மணிகள்
கத்திரிக்கோல்
முதலில் வாட்டர் பாட்டிலை கத்தரிக்கோலால் இரண்டு துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

சாட் பேப்பர் அல்லது சிறிது கனமான அட்டையில் படத்தில் உள்ளது போல் ஒரு பெரிய பூவின் இதழ் போன்று வரைந்து தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அட்டையில் நறுக்கி வைத்திருக்கும் இதழை மூடியுடன் உடைய வாட்டர் பாட்டிலின் மேல் பாகத்தில் வைத்து கருப்புநிற ஸ்கெட்ச் பேனாவால் இதழ்களை வரைந்துக் கொள்ளவும். ஒவ்வொரு இதழ்கள் வரையும் போது அரை இன்ச் அளவு இடைவெளி விட்டு வரைய ஆரம்பிக்கவும்.

பாட்டிலை சுற்றிலும் வரைந்து முடிந்ததும் கத்தரிக்கோலால் வரைந்தப்பகுதியை நறுக்கிக் கொள்ளவும். இதழ்களின் இடையில் உள்ள பகுதியை சிறிய இலைகள் வடிவத்தில் நறுக்கிவிட்டு மீதிப்பகுதியை தனியாக வெட்டி எடுத்து விடவும்.

பிறகு நறுக்கிய பாட்டில்கள், ஃபேப்பரிக் பெயிண்ட், ப்ரஷ் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதழ்கள் போன்று செய்திருக்கும் வாட்டர் பாட்டிலின் ஒவ்வொரு இதழ்களின் உட்புறத்திலும் லைட் ப்ளு நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.

அதே பாட்டிலின் இலைகள் வடிவில் வெட்டியிருக்கும் பகுதியில் பச்சைநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.

இதழ்களில் அடித்திருக்கும் பெயிண்ட் காய்ந்தவுடன் படத்தில் உள்ளது போன்று இதழ்களின் மீது லைட் பிங்க் நிற பெயிண்டை சிறிய வட்ட வடிவமாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு பாட்டில் அடிப்பாகத்தில் இருக்கும் ஒவ்வொரு வளைவுக்கும் ஒவ்வொரு நிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.பாட்டிலில் பெயிண்ட் செய்யும் பொழுது ஒன்று டார்க் நிற பெயிண்டாகவும், மற்றொன்று லைட் நிற பெயிண்டாக இருப்பதுபோல் பெயிண்ட் செய்யவும்.

இதுப்போல் பாட்டிலின் அடிப்பாகம் முழுவதும் பெயிண்ட் செய்துக் காய விடவும்.

வாட்டர் பாட்டில் மூடியை தனியாக கழற்றி அதன் நடுவில் ஒரு பேனா உள்ளே நுழைவதற்கு தகுந்தாற்ப் போல் ஓட்டைப் போட்டு கொண்டு அந்த ஓட்டையில் பேனாவின் அடிப்பாகத்தை கால் பகுதியளவு நுழைத்து கொள்ளவும். உல்லன் நூலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். துண்டாக நறுக்கிய உல்லன்நூலை தேவையான அளவு எடுத்து பேனாவின் அடிப்பகுதியில் உள்ள துளையில் பாதியளவிற்கு நுழைத்துக் கொள்ளவும். பிறகு பேனாவின் உல்லன்நூல் சொருகிய பக்கத்திலிருந்து இரண்டு செ,மீ அளவிற்கு பச்சைநிற கம் டேப்பை சுற்றிக் கொள்ளவும்.

இதழ்கள் செய்திருக்கும் பாட்டிலின் நடுவில் உள்ள ஓட்டையில், பேனாவில் உல்லன் நூல் சொருகிய பகுதி மேலே இருக்கும்படி பொருத்திக் கொண்டு பேனாவை நுழைத்த வாட்டர் பாட்டில் மூடியினால் பாட்டிலை மூடிக்கொள்ளவும். வாட்டர் பாட்டிலின் மூடியிலிருந்து பச்சைநிற கம் டேப்பை பேனாவின் முக்கால் பாகம் வரைக்கும் இடைவெளி தெரியாமல் நன்கு இறுக்கமாக சுற்றிக் கொள்ளவும்.

பலநிறங்கள் கொண்டு பெயிண்ட் செய்திருக்கும் வாட்டர் பாட்டில் முழுவதும் மணல் நிரப்பி, அதன் மேலே பெரிய மணிகளை போட்டு வைக்கவும்.

பிறகு செய்து வைத்திருக்கும் வாட்டர் பாட்டில் பூவை அதன் நடுவில் சொருகி வைக்கவும். வீட்டில் இருக்ககூடிய பொருட்களை வைத்து மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அழகிய பாட்டில் பூச்சாடி தயார்.

திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த பாட்டில் பூச்சாடி செய்முறையை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

Comments
பாப்பி
அழகாக இருக்கிறது பாப்பி. வெறும் பழைய பாட்டில்களை வைத்தே எத்தனை கைவேலைகள் காட்டிக் கொடுக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
வாட்டர் பாட்டில் பூச்சாடி
பாப்பி வீட்டில் ஒரு வாட்டர் பாட்டிலையும் வீணாக்குவது இல்லை போல. வாட்டர் பாட்டில் பூச்சாடி சூப்பரா கண்ணை கவரும் வண்ணம் இருக்கு. பாப்பாவையும் வைத்து கொண்டு எப்படி செய்கிறீர்கள்.
Jaleelakamal
மேடம் மிக
மேடம் மிக அருமையாக இருக்கிரது.நான் மதி அருசுவைக்கு புதிது.நன்றி
do fast mathi
வாட்டர் பாட்டில் பூச்சாடி
பாப்பி வாட்டர் பாட்டில் பூச்சாடி அழகாக இருக்கிறது. நானும் இதில் பாதி செய்து விட்டேன். இப்போது அது எங்கள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது :-). அட்மினுக்கு ஃபோட்டோ அனுப்பியிருக்கிறேன். நன்றி
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வாட்டர் பாட்டில் கொண்டு பூச்சாடி
--
வாட்டர் பாட்டில் கொண்டு பூச்சாடி
அழகாக இருக்கிறது கவி. :)
- இமா க்றிஸ்
நன்றி
நன்றி அட்மின்! நன்றி இமா!!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
hi admin
enkku kavisiva padam teriyavillai
do fast mathi
dear akka
vimala,
very very nice.
vimala
suppera irukku
suppera irukku
ஏமாறாதே|ஏமாற்றாதே
செண்பகா பாபு
வாட்டர் பாட்டில் பூச்சாடி ரொம்ப அழகா இருக்கு . வாழ்த்துக்கள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
Hai Madam... U r having
Hai Madam...
U r having wonderful creative mind. Its Really suberb.........
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
VERY NICE
ITHU ROMBA ALAGHA IRIKUDU SUPER