தேதி: April 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
பால் - 600 மி.லி
திராட்சை - 10 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
பச்சை கற்பூரம் - மிகச்சிறிய துண்டு
கிராம்பு - 2
முந்திரிப் பருப்புடன் சிறிது பால் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

மிக்ஸில் முந்திரி பருப்பை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டியாகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் முந்திரிப் பருப்பு கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து, அடிப்பிடிக்காமல் கிளறவும்.

முந்திரி பருப்புக் கலவை கெட்டியாக வரும் சமயத்தில் நெய்யில் வறுத்த திராட்சை, கிராம்பு மற்றும் சர்க்கரை, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி விடவும். கடைசியாக காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி விட்டு இறக்கவும்.

சுவையான முந்திரிப் பருப்பு பாயாசம் தயார். சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.
